தொலைக்காட்சி உலகில் TRP போட்டியில் முன்னணியில் இருக்கும் சன் தொலைக்காட்சியின் பெரும் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் சீரியல் "சுந்தரி". இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியல்லா, தனது எளிமையான நடிப்பால் மக்களிடம் பேராதரவை பெற்றவர். தற்போது அவர் தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தைக் கடந்துள்ளார்.
சீரியல் முடிந்ததும் சொந்த ஊருக்கு திரும்பி, குடும்பத்துடன் நேரம் கழித்த கேப்ரியல்லா, விரைவில் கர்ப்பமாகி வளைகாப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினார். அந்த விழாவில் "சுந்தரி" தொடரில் நடித்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்போது, மகிழ்ச்சியான செய்தியொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கேப்ரியல்லா. 2025 மே 5ஆம் தேதி பிறந்த தனது மகளின் புகைப்படத்துடன், தனது மனத்தின் ஆழத்திலிருந்து எழுதிய வார்த்தைகள் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.
மகளே – 5.05.2025
* உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே… இவ்வுலகம் உனக்கானது மகளே…
* இவர்களுக்கு எனது அடி மனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சித்ரா அம்மா, மருத்துவர்கள், செவிலியர்கள் இன்றி சுகப்பிரசவம் சாத்தியம் இல்லை.
* எனது அன்பு கொட்டி குடுக்கும் மக்களின் பிரார்த்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள்.
இந்த தருணத்திற்காக காத்திருக்கும் என் சகோதரிகளுக்கு, இந்த மகிழ்ச்சியை இறைவன் விரைவில் அருள வேண்டும் என்பதே என் முதல் பிரார்த்தனை..
இந்த செய்தியுடன் கேப்ரியல்லா தனது மகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களும், நட்புமுறை கொண்ட திரைத்துறையினரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
0 Comments