வவுனியாவில் சூறாவளிக்காற்று மற்றும் மழை - மக்கள் வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் சூறாவளிக்காற்று மற்றும் மழை - மக்கள் வாழ்க்கை பாதிப்பு

வவுனியா - மே 17, 2025

காலை 7.00 மணியளவில் திடீரென வீசிய வேகமான காற்றும் அதனைத் தொடர்ந்த மழையும் வவுனியாவின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்வதற்கு காரணமாகியுள்ளது. குறிப்பாக நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் வழியாக செல்வது கடினமாகி விட்டது.

நடவடிப்பாதை விற்பனை நிலையங்கள் பல இழுந்து சேதமடைந்துள்ளன. சில கடைகள் முற்றாகவே காற்றில் அடித்துச்செல்லப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வவுனியாவில் சூறாவளிக்காற்று மற்றும் மழை - மக்கள் வாழ்க்கை பாதிப்பு

மின்வடங்களின் மேல் மரங்கள் விழுந்ததன் காரணமாக, பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் மக்கள் இருண்ட சூழ்நிலையில் தங்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுவதால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் தற்காலிக இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்புப் படையினர், சேதம் ஏற்ப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

வவுனியாவில் சூறாவளிக்காற்று மற்றும் மழை - மக்கள் வாழ்க்கை பாதிப்பு


Post a Comment

0 Comments