யாழ்ப்பாணம் - கடந்த சில மாதங்களாக இலங்கை முழுவதும் தொடர்ந்து உயர்ந்துவரும் தங்க விலை, இன்று (16.05.2025) சற்று குறைந்த நிலையில் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வந்த தங்க விலை, இன்றைய தினம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாணய பரிவர்த்தனை நிலையங்களின் தகவலின்படி, இன்று 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்றின் விலை ரூ. 259,000 என பதிவாகியுள்ளது. அதேவேளை, 22 கரட் தங்க பவுண் (8 கிராம்) விலை ரூ. 237,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை ஏறக்குறைய தினசரி மாறுபட்டு வருவதால், வாடிக்கையாளர்கள் பெரும் கவனத்துடன் பங்கெடுத்து வருகின்றனர். உலக சந்தையில் நிலவும் நிலவரங்களும், நாட்டின் நாணய மதிப்பு மாற்றங்களும் தங்க விலைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அடுத்த சில நாட்களில் தங்க விலைகள் மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. எனினும், நிபுணர்கள் இதனை ஒரு சாதாரண சரிவாகவே கருதுகின்றனர்.
0 Comments