வவுனியாவில் வெசாக் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

வவுனியாவில் வெசாக் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும் மீறி, வவுனியாவில் வெசாக் பண்டிகை மிகச் சிறப்பாகவும், மக்களது உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது.

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, புத்தரின் பிறப்பும் பரிநிர்வாணமும் நினைவுகூரும் வகையில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கமைவாக வவுனியாவில் உள்ள போதிதட்சனராமய விகாரையை மையமாக கொண்டு வெசாக் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வவுனியாவில் வெசாக் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது

நகரின் முக்கிய இடங்கள், பொலிஸ் நிலையம், அரச அலுவலகங்கள், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளுக்கு முன்னால் வெசாக் கூடுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வவுனியா நகரிலும் பெளத்த கொடிகள் பறக்க விடப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

போதிதட்சனராமய விகாரை முன்பாக அமைக்கப்பட்ட வெசாக் கூடுகள் மற்றும் புத்தரின் பரிநிர்வாண நிலையம் தொடர்பான காட்சிகள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெசாக் பண்டிகையினை அனுபவிக்க வந்தனர்.

இதனால் வவுனியா நகரம் முதல் விகாரை வரையிலான ஏ9 வீதி பகுதி மக்கள் கூட்டம் அதிகரித்து, பாதுகாப்பிற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் வெசாக் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது


Post a Comment

0 Comments